ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிராமண சமாஜம் ஆதரவு
பழநி,: மத்திய அரசு நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்ததை வரவேற்பதாக தமிழ்நாடு பிராமண சமாஜ நிறுவனத் தலைவர் ஹரிஹர முத்தய்யர் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: ஜாதி வாரி கணக்கெடுப்பு அனைத்து சமூகங்களின் சமூக பொருளாதார நிலைமைகளை புரிந்து கொள்ள, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் நலனுக்காக உள்ளடங்கிய கொள்கைகளை உருவாக்க ஒரு குறிப்பிடத்தக்க பணியாகும். சமூக நீதியை மேம்படுத்த, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த, மதிப்பு மிக்க தரவுகளை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். பிராமண சமூகம் எப்போதும் கல்வி, சமூக நல்லிணக்கம், முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நியாயமான பாரபட்சமற்ற, நுணுக்கமான முறையில் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆலோசனை உடன் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்தும் கொள்கைகளை வடிவமைக்க இந்த கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முக்கியமான முயற்சியில் அரசிற்கு எங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
போரின் போது உயிர் தப்புவது எப்படி; ஜம்மு பள்ளிகளில் மாணவர்களுக்கு விசேஷ பயிற்சி
-
ஈஷா மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய 'காய்கறி சாகுபடி' கருத்தரங்கம்
-
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை
-
தமிழ் மொழியை கற்றுத்தரும் ஈஷா
-
வாழ்வின் மாயாஜாலம் உணர..
-
தி.மு.க.,வை வீழ்த்த போடும் மனக்கணக்கு தப்புக்கணக்காக முடியும்; முதல்வர் ஸ்டாலின்