கோயில் வளாகத்தில் தேங்கிய மழை நீர்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் தற்போது கத்தரி வெயிலின் தாக்கமும் உள்ளது.

நேற்று காலை முதல் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் பிற்பகலில் குறைந்து மேக மூட்டம் சூறைக்காற்றுடன் 3:30 மணிக்கு துவங்கிய மழை அரை மணி நேரம் பெய்தது.

மழையால் புழுக்கம் குறைந்தது. முத்துமாரியம்மன் கோயில் வளாககத்தில் மழைநீர் தேங்கியது. இதனை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

Advertisement