திருக்கோவிலுாரில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுார் : ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார்.

தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல் நாளான நேற்று ஆவிகொளப்பாக்கம் குறுவட்ட கிராம கணக்குகளை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து 95 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனந்தசயனன், சமூக நல தாசில்தார் கண்ணன், நில அளவைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement