நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் 'பாஸ்'

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.

இப்பள்ளியில், 81 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் முதல் மாணவியாக, 477 மதிப்பெண்கள் பெற்று ஹரி சுபாஷினி தேர்ச்சி பெற்றார். மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Advertisement