அ.தி.மு.க., சார்பில் அன்னதானம்

கோத்தகிரி : அ.தி.மு.க., பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பிறந்த நாளை ஒட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்து, அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, அவைத் தலைவர் மணி ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் தேனாடு லட்சுமணன் உட்பட, பலர் பங்கேற்றனர். முன்னதாக, கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement