ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி: திருக்கனூர் ப்ரைனி ப்ளூம்ஸ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு 2024- 25ம் கல்வி ஆண்டில், பள்ளியில், 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில் 115 பேர் 450க்கு மேலும், 7 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 94 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2வில் 89 பேர் 450க்கு மேலும், 2 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 73 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை மாணவர்களை அரவிந்த் கல்விக் குழும தலைவரான வழக்கறிஞர் அருண்குமார், பள்ளி துணை சேர்மன் திவ்யா அருண்குமார் ஆகியோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி