வாடகை கட்டடத்தில் ரேஷன் கடைகள்
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் 110 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பேரையூர் காமராஜர் தெரு, அரண்மனை வீதி,, எஸ்.மேலப்பட்டி, பி தொட்டியபட்டி வேப்பம்பட்டி ஜம்பலபுரம் உள்ளிட்ட 20 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
பல ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளில் இட நெருக்கடியாக இருப்பதால் மக்கள் வரிசையில் நிற்பதற்குகூட இடம் இல்லை. போதிய வசதி இன்றி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
ரேஷன் கடைக்கு வருவோர் வெயில், மழையில் நிற்க வேண்டிய அவலம் உள்ளது. புதிய கட்டடம் கட்ட வேண்டும் என இப்பகுதியினர் நீண்ட நாட்களாக வலியுறுத்துகின்றனர். அதற்கேற்ற வசதியுடன் ரேஷன் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?
-
அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; மத்திய அரசு தயார்
Advertisement
Advertisement