விருதுநகர் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து; பொருட்கள் சேதம்

விருதுநகர்: விருதுநகர் - மதுரை சாலையில் ஈஷா சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இக்கடையில் நேற்று(மே 19) இரவு 11:30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்தில் கடையில் உள்ள விற்பனைப் பொருட்கள் எரிந்து பாழாகியது.
விருதுநகர் கே.ஆர்., கார்டனை சேர்ந்தவர் ராமபிரான். இவருக்கு சொந்தமான ஈஷா சூப்பர் மார்க்கெட் கடையை நேற்று இரவு 10:30 மணிக்கு ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இரவு 11:30 மணிக்கு கடை உள்ளே மின் கசிவால் தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்தது. தீ முன்னெச்சரிக்கை அலாரம் சப்தம் எழுப்பியதால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் , போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
இக்கடையின் அருகேயுள்ள தனியார் வங்கியின் தீ முன்னெச்சரிக்கை அலாரமும் சப்தம் எழுப்பியதால் தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மளிகை பொருட்கள், கணினிகள், பில்லிங் மிஷின்கள் சேதமாகின. போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் எஸ்.பி., கண்ணன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சந்திர குமார் ஆய்வு செய்தனர்.
மேலும்
-
தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி
-
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
-
பார்க்கிங் இடம் இல்லை என்றால் கார் பதிவு கிடையாது: மஹா. அரசு கறார்
-
மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
-
ஒரு நாள் மழைக்கே தாங்காத மேற்கூரை சிதம்பரத்தில் ரயில் பயணிகள் அதிர்ச்சி