மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேசிய கொடி வெற்றி ஊர்வலம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் ராணுவ வீரர்கள், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் தேசிய கொடி வெற்றி ஊர்வலம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றிகரமாக நடத்திய ராணுவ வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய கொடி வெற்றி ஊர்வலம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நடந்தது.
கூனிச்சம்பட்டு ஐயனாரப்பன் கோவில் அருகே துவங்கிய தேசிய கொடி வெற்றி ஊர்வலத்தை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பா.ஜ., பிரமுகர் முத்த ழகன், வர்த்தக அணி மாநில தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பா.ஜ., மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூனிச்சம்பட்டு, ஐயனாரப்பன் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம், மணலிப்பட்டு பாதை, திருக்கனுார் பஜார் வீதி, வணிகர் வீதி வழியாக முத்து மாரியம்மன் கோவில் அருகே முடிவடைந்தது.
மேலும்
-
விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!
-
உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்., நையாண்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் கவர்னர் பெருமிதம்
-
நேஷனல் ஹெரால்டு மோசடி; ரூ.142 கோடி பயன் அடைந்த சோனியா, ராகுல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!