ஆந்திராவில் காரும், லாரியும் மோதி விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் காரும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா - ராயசோட்டி இடையே கூவுல செருவு மலைப்பாதையில் காரும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கார் முற்றிலுமாக நொறுங்கியது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோகம் என்ற பெயரில் நகைச்சுவை: ராகுல் மீது பா.ஜ., குற்றசாட்டு
-
தென்மேற்கு பருவ மழை எதிரொலி: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
கொச்சியில் கண்டெய்னர் கப்பல் மூழ்கியது; மாலுமிகளை மீட்கும் பணி தீவிரம்
-
கோடை காலத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
-
அமெரிக்கர்களிடம் தினமும் ரூ.25 லட்சம் மோசடி: புனேயில் போலி கால்சென்டர் மூடல்; 5 பேர் கைது
-
முடங்கியது எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி
Advertisement
Advertisement