டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சீனமங்கலம் கார் உரிமையாளர் மற்றும் டிரைவர் வள்ளியப்பன் 43. இவர், அதே ஊரை சேர்ந்த கட்டட தொழிலாளி அர்ச்சுணன் 25, என்பவரின் காதல் விஷயத்தை கிராமத்தில் உள்ள அனைவரிடமும் கூறியுள்ளார்.
இந்த ஆத்திரத்தில் இருந்த அர்ச்சுணன், அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு வள்ளியப்பனை மறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் அர்ச்சுணனை திருவேகம்புத்துார் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கட்டட தொழிலாளிகளான மச்சக்காளை மகன் ஆனந்த் 30, பெரியகருப்பன் மகன் பூமி 26, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement