எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு

மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த நாரலப்பள்ளி ஏரி அருகே, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் தடையை மீறி, எருது விடும் விழா நடத்தப்பட்-டது. இதனால், நாரலப்பள்ளியை சேர்ந்த மதுராஜ், 45, உட்பட, 3 பேர் மீது, மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.



அதேபோல், மகாராஜகடை அருகே சின்ன தக்கேப்பள்ளி கிரா-மத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் நேற்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.இதனால், சின்ன தக்கேப்பள்ளியை சேர்ந்த தேவேந்திரன், 52, உட்பட, 4 பேர் மீது மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement