அடிப்படை வசதியின்றி சிரமப்படும் மக்கள்

வீரபாண்டி: வீரபாண்டி ஊராட்சி பெரிய சீரகாபாடியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள பெரும்பாலான வீதி-களின் சாக்கடை கால்வாய், 3 மாதங்களாகவே துார்வாரப்பட-வில்லை.

இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்கள் இரவில் நிம்மதி-யாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் போதிய எண்-ணிக்கையில் தெருவிளக்குகளும் இல்லாததால், மக்கள் சிரமப்ப-டுகின்றனர். இதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement