தேசப்பற்று வெளிப்படுத்திய மக்கள்

'ஆப்பரேஷன்' சிந்துார் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், நாட்டைக் காக்கும் பணியில் வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பெருமாநல்லுாரில் நேற்று தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், தேசிய கொடி ஊர்வலம் நடந்தது. ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், மாகாளியம்மன் கோவில், ஸ்கூல் ஸ்டாப், நால் ரோடு வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது.

பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கரங்களில் தேசிய கொடியேந்தியபடி பங்கேற்றனர்.

Advertisement