2 டன் முருங்கை வரத்து

வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் முருங்கைகள், வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த வாரம், 3 டன் வந்தது; கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 2 டன் வந்தது. கரும்பு, செடி மற்றும் மர முருங்கை, 50 ரூபாய்க்கு விற்பனையானது. சில வாரங்களாக தென் மாவட்டங்களில் இருந்து தினமும், 40 டன் வருவதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Advertisement