இன்று வேளாண் சிறப்பு முகாம்

போடி: போடி அருகே பூதிப்புரம், பாலார்பட்டி சமுதாய கூடத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவரை தேடி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

இம்முகாமில் வேளாண், தோட்டக் கலை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை விற்பனை, விதை சான்றளிப்பு துறை, பயிர் காப்பீடுநிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இத் துறைகளில் செயல் படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், தொழில் நுட்பம், மத்திய, மாநில அரசின் திட்டம் குறித்த ஆலோசனைகள், பயிர் காப்பீடு, இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் உப்புக்கோட்டை, பூதிப்புரம் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Advertisement