உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்

4

வாஷிங்டன்: உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, வர்த்தக நீதிமன்றம் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. வரிகளை நியாயப்படுத்த டிரம்ப் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியதை நீதிமன்றம் நிராகரித்தது.


அனைத்து உலக நாடுகள் மீதும் ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கவில்லை. அதிபர் டிரம்ப் தனக்கு அளித்த அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வெளியானதும் டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

Advertisement