இபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு

2

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ் உடன் தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார்.


ராஜ்யசபாவுக்கு காலியாகும் 6 எம்.பி., பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஒரு எம்.பி., பதவியை தே.மு.தி.க., எதிர்பார்க்கிறது. அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி ஒன்றில், தங்களுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியே தீர வேண்டும் எனக்கூறியிருந்தார்.


இச்சூழ்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இ.பி.எஸ்., வீட்டில், அவரை சுதீஷ் சந்தித்து பேசினார்.

Advertisement