பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: "பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்னைக்கும், பா.ஜ.,விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
@1brதிருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் அவர் நாகேந்திரன் கூறியதாவது: ராணிப்பேட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது முழுக்க, முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. போலீசார் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் மார்தட்டி பேசுகிறார். இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானை உள்ளது. அதை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். விதிமுறைகளை பின்பற்றி முதல்வரிடம் பேசி யானைகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி மோதலுக்கு பின்னால் பா.ஜ., இருக்கிறது என்று கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
இது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பா. ஜ., விற்கும், பா.ம.க.,வின் உட்கட்சி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தொடர்பும் கிடையாது பின்னணியும் கிடையாது.
இது முழுக்க.முழுக்க அவரது உட்கட்சி பிரச்னை அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்னைகளில் நாம் தலையிடுவது சரியானதாகவும் இருக்காது என்றார்.
அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் யார் என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அதை இ.பி.எஸ்., இடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து (5)
துர்வேஷ் சகாதேவன் - ,இந்தியா
30 மே,2025 - 17:55 Report Abuse

0
0
Reply
madhesh varan - ,இந்தியா
30 மே,2025 - 17:27 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
30 மே,2025 - 16:35 Report Abuse

0
0
Reply
சங்கேஷ் - ,
30 மே,2025 - 16:16 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
30 மே,2025 - 15:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
கனமழையால் நிலச்சரிவு: அசாமில் 5 பேர், அருணாச்சலில் 7 பேர் உயிரிழப்பு
-
விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சுவது தீவிரமான குற்றம்: போலீசார் எச்சரிக்கை
-
நியூ ஜல்பைகுரி முதல் டார்ஜிலிங் வரை பயணம்: 125 வயதை எட்டிய நீராவி இஞ்சின் ரயில்
-
வேலியே பயிரை மேய்ந்தது: குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது
-
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு
Advertisement
Advertisement