டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

இடையகோட்டை: சின்னக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 56. மே 27 ல் தனது டூவீலரில் மார்க்கம்பட்டி -சின்னக்காம்பட்டி ரோட்டில் சென்றார். கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது மண்குவியலில் டூவீலர் சறுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் இறந்தார். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement