டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி, 63. இவர், நேற்று மாலை தன், 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூ-வீலரில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருந்து வாலிகண்டபுரம் வந்துவிட்டு, பின்னர் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த அதியமான், 18, என்பவர் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., டூ-வீலரில், தன் தாய் மஞ்சுளா, 45, உடன் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருவரின் டூ-வீலரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், அய்யாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அதியமான், மஞ்சுளா சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்
Advertisement
Advertisement