டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி, 63. இவர், நேற்று மாலை தன், 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூ-வீலரில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருந்து வாலிகண்டபுரம் வந்துவிட்டு, பின்னர் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த அதியமான், 18, என்பவர் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., டூ-வீலரில், தன் தாய் மஞ்சுளா, 45, உடன் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருவரின் டூ-வீலரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், அய்யாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அதியமான், மஞ்சுளா சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement