தாமிரபரணியில் மூழ்கிய வாலிபர் பலி; மூவர் மீட்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கோவில் வருஷாபிஷேக விழாவிற்காக தீர்த்தம் எடுக்க தாமிரபரணி ஆற்றுக்கு நேற்று சென்றனர். முக்காணி ஆற்றுப்பாலம் பகுதியில் அவர்கள் ஆற்றில் இறங்கியபோது திடீரென ஏற்பட்ட சுழலில் கோகுல், 18, என்ற வாலிபர் சிக்கினார். அவரை காப்பாற்ற சென்ற மூன்று வாலிபர்களும் சுழலில் சிக்கியதால், அவர்களை கிராம மக்கள் மீட்டனர்.
நீரில் மூழ்கி, கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். கோகுலின் உடலை வாங்க மறுத்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி பகுதி தாரங்கதாரா கெமிக்கல் தொழிற்சாலைக்கு ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் ஏற்பட்ட சுழலால், கோகுல் உயிரிழந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்
Advertisement
Advertisement