நிகர்நிலை பல்கலை அந்தஸ்து புதிய அலுவலகம் திறப்பு

கோவை,: பி.கே.தாஸ் சமூக அறிவியல், சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக் கழகமாக உயரும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்கான அலுவலகம், நேரு கல்வி நிறுவன வளாகத்தில் துவங்கப்பட்டது. முன்னதாக, நிறுவனர் பி.கே.தாசிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த பல்கலையை முறைப்படி, நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், முதுநிலை ஊழியர் சின்னமணி துவக்கி வைத்தனர். நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணக்குமார், செயல் இயக்குனர் நாகராஜா, நேரு கலை அறிவியல் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் அனிருதன், நேரு தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் சிவராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement