சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடி

சிவகாசி: சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.
சிவகாசி பழைய விருதுநகர் ரோடு, பசும்பொன் ரோடு விலக்கில் கழிவுநீர் மழை நீர் வெளியேறி செல்வதற்கு ஏதுவாக வாறுகால் ரோட்டின் அடியில் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்காக அமைக்கப்பட்ட திறந்தவெளியை மூடுவதற்காக இரும்பு குழாயினால் ஆன மூடி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அச்சகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
இந்த வாகனங்கள் இரும்பு குழாய் மூடி மீது ஏறிச் செல்வதால் சேதமடைந்து இரும்பு குழாய் வெளியே நீட்டி கொண்டிருக்கிறது. மூன்று ரோடு பிரியும் இடத்தில் இவ்வாறு இருப்பதால் டூ வீலர், சைக்கிளில் நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தவிர கார் உள்ளிட்ட வாகனங்கள் இரும்பு மூடி மீது தெரியாமல் ஏறிச் செல்லும் போது விபத்தில் சிக்குகிறது.
எனவே இதனை அகற்றிவிட்டு தரமான மூடி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்