வடிகால் வாரிய அலுவலகம் எதிரே மீண்டும் மீண்டும் உடையுது குழாய்

விருதுநகர்:விருதுநகர் மதுரை ரோட்டில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே செல்லும் ரோட்டின் மீண்டும் மீண்டும் உடையும் குழாயால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர் மதுரை ரோட்டில் குறுக்கு தெருவாக கே.ஆர்., கார்டன் சந்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே உள்ளது. இந்த கே.ஆர்., கார்டன் சந்தின் எதிர்ப்புறம், மதுரை ரோட்டின் இடது புறத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இது தாமிரபரணி குடிநீர் குழாயாக உள்ளது. இந்நிலையில் இந்த குழாய் அடிக்கடி உடைசல் ஏற்படுகிறது.
கடந்த வாரம் மூன்று முறை உடைந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மீண்டும் உடைந்து தற்போது குடிநீர் வீணாகி வருகிறது.
ஒரே குழாய் நான்கு முறை உடைந்து தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே வேறு உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்