வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன் தினம் இரவு ஏறுசக்கர விநாயகர் கோயிலில் இருந்து புனித மண் எடுத்தல் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில்,சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ரகுபட்டர் கொடி பட்டம்ஏற்றினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் கோயில் பட்டார்கள் செய்துஇருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்லக்கு சேவை, இரவு வீதியுலா, கோயில் முன்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
ஜூன் 6 இரவு 7:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் திருக்கல்யாணம், ஜூன் 8 காலை 8:30 மணிக்கு தேரோட்டமும், ஜூன் 9 காலை 9:00 மணிக்கு மேல் வைகாசி விசாக சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
மேலும்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்