காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்

ஜெருசலேம்: காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் காசாவில் அமெரிக்கா நிதியுதவி இயங்கி வரும் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. “ போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து ஒரு நிலையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல் படுகொலை" என ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.




மேலும்
-
அரசு இரிடியம் விற்பதாக மர்ம கும்பல் மோசடி
-
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் உணவுப்படி உயர்வு நாளொன்றுக்கு ரூ.250ல் இருந்து 350 ஆனது
-
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு
-
ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி
-
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம்
-
வணிகர் வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராகலாம்