பாரா வில்வித்தை: ராகேஷ் 'தங்கம்'

ரோம்: பாரா வில்வித்தையில் இந்தியாவின் ராகேஷ் தங்கம் வென்றார்.
இத்தாலி தலைநகர் ரோமில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஐரோப்பிய பாரா வில்வித்தை கோப்பை தொடர் நடந்தது. ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் ராகேஷ் குமார், பிரிட்டனின் நாதன் மெக்குயின் மோதினர். அபாரமாக ஆடிய ராகேஷ் 145-142 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது தங்கம். ஏற்கனவே, காம்பவுண்டு அணிகள் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார்.
ஆண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் தன்னா ராம் கோதாரா, பிரிட்டனின் கேமிரான் ரேடிகன் மோதினர். இதில் அசத்திய தன்னா ராம் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என, 8 பதக்கம் கிடைத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement