தமிழ் தலைவாஸ் அணியில் மோகித்: புரோ கபடி ஏலத்தில் ஒப்பந்தம்

மும்பை: புரோ கபடி லீக் வீரர்கள் ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணியில் மோகித், சுரேஷ் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
மும்பையில், புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இரண்டு நாட்களாக நடந்தது. முதல் நாள் ஏலத்தில், ஈரான் வீரர் முகமது ரேசா, ரூ. 2.23 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. மொத்தம் 26 பேர் ஒப்பந்தமாகினர்.
நேற்று 2ம் நாள் ஏலம் நடந்தது. இதில் 'ஆல்-ரவுண்டர்' ஆனில் மோகனை, ரூ. 78 லட்சத்திற்கு மும்பை அணி வாங்கியது. தமிழ் தலைவாஸ் அணியில் அலிரேசா கலிலி (ரூ. 30.20 லட்சம்), மோகித் (ரூ. 13 லட்சம்), சுரேஷ் ஜாதவ் (ரூ. 9.50 லட்சம்) ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஆகாஷ் ஷிண்டே (ரூ. 53.10 லட்சம், பெங்களூரு), உதய் பார்தே (ரூ. 50.10 லட்சம், ஜெய்ப்பூர்), நிதின் ராவல் (ரூ. 50 லட்சம், ஜெய்ப்பூர்), சந்தீப் குமார் (ரூ. 49 லட்சம், மும்பை), குர்தீப் (ரூ. 47.10 லட்சம், புனே) உள்ளிட்டோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பர்தீப் நார்வல், சாஹில் குலியாவை எந்த ஒரு அணியும் வாங்க
முன்வரவில்லை.
மொத்தம் 529 பேர் ஏலத்தில் வந்தனர். இதில் 121 வீரர்கள் பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகினர். இதற்காக ரூ. 59.064 கோடி செலவிடப்பட்டது. இதில் புனே அணி, அதிகபட்சமாக ரூ. 5 கோடிக்கு வீரர்களை வாங்கியது.
மேலும்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்