அஞ்சலை அம்மாள் சிலைக்கு காங்., மரியாதை  

கடலுார்:கடலுாரில் தியாகி அஞ்சலை அம்மாள் 135வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு காங்., சார்பில் மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்., மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர், அஞ்சலை அம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவர் காங்., தலைவர் கார்த்திகேயன், ஓ.பி.சி., மாநில பொதுச் செயலாளர் ராமராஜ், வட்டாரத் துணைத் தலைவர் ராஜா ராமன், சிறுபான்மை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுப், முன்னாள் வட்டாரத் தலைவர் அன்பழகன் ஐ.என்.டி.சி., மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், வட்டாரத் துணைத் தலைவர் குப்புசாமி, செங்கேணி மாவட்ட சேவா தளம் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், இளைஞரணி விக்னேஷ், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement