ஆடு திருடிய 2 பேர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஆடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் முருகையன், 85; ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, அதே பகுதியை சேர்ந்த பிரவின் ராஜ், 27; மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தார்.

Advertisement