அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் முன்னேறி செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை ரோட்டில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
ஆனால் டிராபிக் போலீசார் அவ்வாறு பணியில் ஈடுபடுவதில்லை. முக்கியஸ்தர்கள் வருகையின் போதும், வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்காக மட்டும் ரோட்டில் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் அரசு மகப்பேறு பிரிவிற்கு முன்னால் தற்போது நீளமான பேரிகார்டுகள் வைத்து ரோட்டை மறித்துள்ளனர். வளைவு பகுதியாக இருப்பதால் பஸ், லாரி, வேன் உள்பட பல வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன.
ஆம்புலன்ஸ் செல்லவும் தாமதமாகிறது. இதனால் ரோட்டை கடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இன்று பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்னும் நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே அரசு மகப்பேறு மருத்துவமனை ரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றி வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனை ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டிராபிக் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு