திருச்சுழியில் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு
திருச்சுழி: திருச்சுழியில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை நீதிபதி ஆய்வு செய்தார்.
திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகில் பல்வேறு வசதிகளுடன் கூடிய உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை திருச்சுழி உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி யோகேஸ்வரன் ஆய்வு செய்தார். கட்டடத்தில் செய்யப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின் திருச்சுழி நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையத்தின் சார்பாக நடந்த மரம் நடு விழாவில் கலந்து கொண்டு புதியதாக நீதிமன்றங்கள் அமைய உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் திருச்சுழி வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் விக்னேஷ் பாண்டியன், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement