திருப்புத்துாரில் பாசன கால்வாயை சீரமைக்கவும்

திருப்புத்துார்: திருப்புத்தூரில் கண்மாய்களை இணைக்கும் பாசனக்கால்வாயை சிமென்ட் கால்வாயாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்புத்தூர் பெரிய கண்மாயிலிருந்து உபரிநீர் தென்மாப்பட்டு கண்மாய்க்கு செல்கிறது. கண்மாயில் இருந்து சிங்கம்புணரி ரோட்டிலிருந்து மதகு வழியாக பாண்டியன் கால்வாயில் கடந்து செல்கிறது. நகருக்குள் பள்ளி வளாகம் வழியாக செல்லும் இந்த கால்வாய் மண் கால்வாயாக உள்ளதாலும், பராமரிப்பின்றி உள்ளதாலும் நீரோட்டம் பாதிக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு ஆக்கிரமிப்பால் கால்வாயும் சுருங்கிவருகிறது. இதனால் இக்கால்வாயின் இரு புறத்திலும் சிமென்ட் தடுப்பு சுவர், கால்வாயாக மாற்ற வேண்டும்.

பொதுப் பணித்துறையினர் நிதி ஒதுக்காததால் இந்த பணி கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது ஆறுகளை பராமரிப்பது போல, கண்மாயிலிருந்து வெளியேறும் இது போன்ற கண்மாய்களை இணைக்கும் இணைப்பு பாசன கால்வாய்களையும் பராமரிக்க வேண்டும்.

Advertisement