கோயிலில் கும்பாபிஷேகம்

எரியோடு: எரியோடு அருகே மாரம்பாடி கோட்டைமந்தையில் செல்வ விநாயகர், பெருமாள், மாசம்மாள், மல்லம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

மே 30ல் நவக்கிரக வேள்வியுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாக கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

கொல்லப்பட்டி சுயம்பு பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க செயலாளர் நடராஜன் பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஒக்கலிகர் காப்பு தசரிவார் குல பங்காளிகள் செய்திருந்தனர்.

Advertisement