அக்னி கடந்தும் அதிகரிக்கும் வெயில்
சித்தையன்கோட்டை,: கன்னிவாடி, செம்பட்டி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி பகுதியில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் இருந்தது. போதிய மழையின்றி பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் 2 வாரங்களாக பகல் நேரங்களில் அதிகரித்து வந்தது. காலை 9 :00 மணிக்கு துவங்கும் வெயிலின் வெம்மையான சூழல் இரவு 7:00 வரை நீடிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பகலில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைய துவங்கி உள்ளது.
சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் சூழ்ந்து பலத்த சூறாவளி வீசுகிறது. என்.பஞ்சம்பட்டி, வக்கம்பட்டி, வீரக்கல், கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சித்தையன்கோட்டை, தருமத்துப்பட்டி பகுதிகளில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும மின்தடை ஏற்படுவதால் வெப்பச்சூழல் மக்களைஅவதிக்குள்ளாகிறது.
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு