போதையில் ஐந்து வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த வாலிபர்கள்

தேவதானப்பட்டி: கொடைக்கானல் ரோடு டம்டம்பாறை அருகே போதையில் டூவீலரில் வந்து இருவர் விலை உயர்ந்த கார் உட்பட 5 வாகனங்கள் மீது அடுத்தடுத்து கற்களை எறிந்து, சேதப்படுத்தி தப்பியதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரகாசபுரம் வேன் டிரைவர் பொன்ராஜ் 62. தினமும் இரவு வேனில் கொடைக்கானலில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மதுரை பரவை காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தார். கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோடு டம்டம் பாறை அருகே செல்லும் போது, எதிரே டூவீலரில் வந்த இருவர், மதுபோதையில் பொன்ராஜ் வேனில் மோதுவது போல் டூவீலரை இயக்கினர்.

டூவீலரை நிறுத்தியவர்கள், டிரைவர் பொன்ராஜ் ஓட்டி வந்த வேன், பின்னால் வந்த கார், அடுத்தடுத்து ஆம்னி பஸ், வேன் என, ஐந்து வாகனங்கள் மீது கற்களை எறிந்து கண்ணாடிகளை உடைத்து தப்பினர். தேவதானப்பட்டி போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement