கிழிந்து தொங்கும் பேனரால் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலைகளான விளக்கடி கோவில் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் வீதி, செங்கழுநீரோடை, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, வேலுார் சாலை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரத்திலும், கட்டடங்களின் மீதும், பல இடங்களில் வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில் ராட்சத 'பிளக்ஸ்' விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதில், காமராஜர் வீதி, ரேஷன் கடை அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள 'பிளக்ஸ்' பேனர் காற்றில் கிழிந்து தொங்கிய நிலையில் உள்ளது.
மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது, தொங்கிய நிலையில் உள்ள பேனர் துண்டாக கிழிந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டியின் மீதோ அல்லது கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களின் முன்பக்க கண்ணாடியை மறைக்கும் வகையில் விழுந்தால், ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, காமராஜர் வீதி, ரேஷன் கடை அருகில், காற்றில் கிழிந்து, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், தொங்கும் பிளக்ஸ் விளம்பர பேனரை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
-
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
-
போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்