விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்

சென்னை:விரைவு ரயிலில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்பு மணி ரயில்வே துறையை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஏழைகளால் ஏ.சி. பெட்டிகளில் பயணிக்க முடியாது: விரைவு ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது!
தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் விரைவுரயில், சென்னை - திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரயில் , நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க ரயில்வேதுறை முடிவு செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவதாக இருக்கும்.
சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி ஏ.சி வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.
ரயில்வே என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் லாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவு ரயிலில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்
-
பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்
-
நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிப்பு; 24 மணி நேரத்தில் 7 பேர் பலி
-
வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவு: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்!
-
மோதல் முடிவுக்கு வருமா? ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு
-
மீண்டும் தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது!