பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

அல்ஜீயர்ஸ்: மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஜாஹியூர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தான் சிறையில் இருந்தபோதே தந்தையாக அனுமதிக்கப்பட்டார் என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவரும், எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள், 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.
இதில், பா.ஜ., - எம்.பி., வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்றது.
அடுத்ததாக, இந்த குழு வட ஆப்ரிக்க நாடான அல்ஜீரியா சென்றது. அங்குள்ள, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் இந்த குழு நேற்று கலந்துரையாடியது.
அக்குழுவில் இடம் பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., - எம்.பி., அசாதுதீன் ஓவைசி பேசியதாவது:
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாஹியூர் ரஹ்மான் லக்வி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் சிறையில் இருந்த போது, அவருக்கு அந்நாட்டு அரசு சிறப்பு சலுகை வழங்கியது. சிறையில் இருந்தபோதே, அவர் தந்தையாக அனுமதிக்கப்பட்டார். இது, வெறெந்த நாட்டிலும் நடக்காத ஒரு கொடுமை.
இந்த விவகாரத்தில், சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ-.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பாக்., மீது உடனடி நடவடிக்கை எடுத்தது.
ஆகையால், பாகிஸ்தானை மீண்டும் அந்த குழுவின் 'கிரே லிஸ்ட்' எனப்படும் சாம்பல் பட்டியலில் சேர்க்க உலக நாடுகள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்.
இதன் வாயிலாக, அந்நாட்டின் பயங்கரவாத சிறகுகள் முறிக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களை கொல்வதன் வாயிலாக, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.







மேலும்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
-
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
-
போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்