அய்யப்பா சேவா சமாஜம் நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம்:சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகர் புதிய பொறுப்பாளர்களின் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், காஞ்சிபுரம் கோட்ட பொறுப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் நேற்று, நடந்தது.

இதில், மாநில தலைவர் ஜெயசந்திரன், பொது செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக பழ சுரேஷ், காஞ்சி மாநகர் தலைவராக சரவணன், காஞ்சிபுரம் ஒன்றிய தலைவராக ரவி மற்றும் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement