பிரெஞ்ச் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் தனது 100வது வெற்றியை பதிவு செய்த செர்பியாவின் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமிரான் நோரி மோதினர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபனில் 100வது வெற்றியை பதிவு செய்த 2வது வீரரானார் ஜோகோவிச். ஏற்கனவே ஸ்பெயினின் நடால் 112 போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-0, 7-5 என, ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-3, 7-5 என ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 4-6, 4-6 என பிரான்சின் லோயிஸ் போய்சனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-3, 7-5 என சகவீராங்கனை ஹெய்லி பாப்டிஸ்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்
-
ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை திருட்டு
-
நடிகர் ரவி மோகன், கெனிஷா குன்றக்குடி கோவிலில் தரிசனம்
-
ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!
-
ராணுவம் குறித்து கருத்து: ராகுலுக்கு அலகாபாத் ஐகோர்ட் கண்டிப்பு
-
எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"