மோதல் முடிவுக்கு வருமா? ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து அன்புமணி பேசினார். இதனால் மோதல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க.,வில், 108 மாவட்டச் செயலர்கள், 108 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். ஆனால், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில், 13 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், மாநிலப் பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலர்கள் சிலரை நீக்கிவிட்டு. புதியவர்களை நியமித்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில், 'தலைமைப்பண்பு இல்லாதவர்' என, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, ராமதாஸ் முன்வைத்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 05) தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து அன்புமணி பேசினார். ராமதாஸ்- அன்புமணி ஆகிய இருவரும் அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மோதல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து (7)
naranam - ,
05 ஜூன்,2025 - 22:11 Report Abuse

0
0
Reply
திருட்டு திராவிடன் - ,
05 ஜூன்,2025 - 15:43 Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் தமிழக குன்றியம் - ,
05 ஜூன்,2025 - 14:09 Report Abuse

0
0
Reply
V K - Chennai,இந்தியா
05 ஜூன்,2025 - 13:14 Report Abuse

0
0
Reply
Raja k - ,இந்தியா
05 ஜூன்,2025 - 11:29 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
05 ஜூன்,2025 - 11:06 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
05 ஜூன்,2025 - 10:57 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்
-
நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
செயற்கைக்கோள் வழி இணைய சேவை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு லைசென்ஸ்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement