ஸ்ரீவி., பஜார் வீதி நடைபாதைகளில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நேதாஜி ரோடு பஜார் வீதி நடைபாதையில் பூ, காய்கறி, பழக்கடைகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு நடந்து செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிவாசல் முதல் வடக்கு ரத வீதி வரை பல்வேறு பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

அப்பகுதியில் உள்ள பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகளின் கழிவுகள் இரவு கடையை மூடி செல்லும்போது ரோட்டின் மையப்பகுதியில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றமும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது.

மேலும், ரோட்டில் இருபுறமும் உள்ள கழிவு நீர் வாறுகால்கள். அடைபட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் கிடப்பதால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல சிரமப்படும் நிலை உள்ளது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement