ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

18


சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்தனர். தி.மு.க., கூட்டணி கட்சியான ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.தி.மு.க., சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், ம.நீ.ம., சார்பில் கமலும் போட்டியிடுகின்றனர்.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவைத்தலைவர் தனபால் போட்டியிடுகின்றனர்.



இந்நிலையில் இன்று (ஜூன் 06) ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்தனர்.


தி.மு.க., கூட்டணி கட்சியான ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், செல்வபெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க.,வினர் வேட்புமனு தாக்கல்



ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவைத்தலைவர் தனபால் தாக்கல் செய்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி., முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement