லேலண்டுக்கு ரூ.184 கோடிக்கு பேருந்துகள் ஆர்டர்

சென்னை:தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகத்திடம் இருந்து, 543 பி.எஸ்.,6 ரக, டீசல் பஸ்கள் தயாரித்து வினியோகிப்பதற்கு, 183.80 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை, அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தாண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 543 டீசல் பஸ்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக இந்துஜா குழுமம் பங்கு சந்தையில் தெரிவித்துள்ளது.

Advertisement