குழலுாதும் கண்ணனாக வரதராஜ பெருமாள் நாளை திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் குழலுாதும் கண்ணனாக பெருமாள் அருள்பாலித்தார்.

கோயிலில் 223 வது வைகாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெரிய திருவடி கருட வாகனத்தில் ராஜ மன்னராக வலம் வந்தார்.

நேற்று காலை பல்லக்கில் குழலுாதும் கண்ணன் மற்றும் இரவு அனுமார் வாகனத்தில் ராமபிரான் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். இன்று யானை வாகனத்திலும், நாளை காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.

Advertisement