அம்மாபேட்டையில் 9.40 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், மழை பொழிவற்ற வற ண்ட வானிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 9.40 மி.மீ., மழை பதிவானது.

கவுந்தப்பாடியில், 3.40 மி.மீ, எலந்தகுட்டை மேட்டில், 1 மி.மீ., குண்டேரிபள்ளம் அணை பகுதியில், 1.40 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் மழை இல்லை. மாறாக பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது.

Advertisement