தக்காளி தவிர்த்து பிற காய்கறி விலை உயர்வு
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி தவிர்த்து, மற்ற காய்கறி வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது.
இப்பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் விளைப்பொருட்களை, தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மழை பெய்ததால், தக்காளி விலை, 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 300 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.
மழைப்பொழிவு நின்றதும், தக்காளி வரத்து அதிகரித்தது.
இதனால், பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று ஒரு டிப்பர் தக்காளி, 200 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு வாரத்தில், தக்காளி, 100 ரூபாய் விலை குறைந்துள்ளது.
அதே சமயம், மற்ற காய்கறி வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. நேற்று, ஒரு கிலோ, வெண்டைக்காய், 20 ரூபாய் உயர்ந்து, 60 ரூபாய்க்கும், கத்தரி, 30 ரூபாய் உயர்ந்து, 90 ரூபாய்க்கும், பச்சை மிளகாய், 33 ரூபாய் உயர்ந்து, 90 ரூபாய்க்கும், அவரை, 30 ரூபாய் உயர்ந்து, 150 ரூபாய்க்கும், முட்டைகோஸ், 15 ரூபாய் உயர்ந்து, 20 ரூபாய்க்கும், கொத்தமல்லி இலை ஒரு கட்டுக்கு, 8 ரூபாய் உயர்ந்து, 20 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்