கல்வி துறைக்கு ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கியவர் ஸ்டாலின் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

ஒட்டன்சத்திரம்: பல்வேறு துறைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ 47 ஆயிரம் கோடியை ஒதுக்கியவர் முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள், பைகளை வழங்கிய அவர் பேசியதாவது: பல்வேறு துறைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ 47 ஆயிரம் கோடியை ஒதுக்கியவர் முதல்வர் ஸ்டாலின். உயர் கல்வித் துறைக்கு 8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் 14 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் நத்தத்தில் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
தாசில்தார் சஞ்சய் காந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, பழநி கல்வி அலுவலர் பரிமளா, தொடக்கக்கல்வி அலுவலர் பிரிட்டோ, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலு, பொன்ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் சோமசுந்தரம், தலைமை ஆசிரியர்கள் மணிமொழி, கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.
மேலும்
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு